தமிழ்நாடு நாள் எப்போது? ஏன்?
“தமிழ்நாடு” இந்த பேர கேட்கும் போதே நமக்கெல்லாம் ரெண்டு முக்கியமான தேதிகள் நினைவுக்கு வரனும் முதல் தேதி, நவம்பர் 01 1956 இது ஏன் நம்ம நினைவுக்கு வரனும் நா இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு அப்றம் மொழிய அடிப்படையா வெச்சி மாநிலங்கள் பிரிக்கப்படனும்-ங்குற கோரிக்கை நாடு முழுக்க பரவலா எழுந்துகிட்டு வந்துச்சி. இதுக்காக பல்வேறு கலவரங்களும் ஏற்பட்டது, இதன் அடிப்படையில பிரதமர் நேரு தலைமையிலான அரசாங்கம் கொண்டு வந்தது தான் States Reorganisation Act, 1956. And இந்த சட்டத்த வெச்சி அதே வருஷம் நவம்பர் 01 ஆம் தேதி ஒருங்கிணைந்த மதராஸ் மாகாணத்துல இருந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் பேசுற பகுதிகள கேரளா, ஆந்திரா, மைசூர் நு மூனு புதிய மாநிலமும். தமிழ் பேசும் எஞ்சியுள்ள பகுதிகூட திருவிதாங்கூர் சமஸ்தானத்தையும் சேர்த்து ஒரு மாநிலம் என்றும்… ஒன்னா இருந்தா மாநிலம் 4 மாநிலமா மறுசீரமைக்கப்பட்டுச்சி. இந்த நாள நினைவு கூறும் விதமா ஒவ்வொரு வருஷமம் அரசே விழாவை முன்னெடுக்கும் அப்டினு, 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் அறிவிச்சாரு. அப்போ இந்த அறிவிப்ப பல்வேறு அமைப்புகள் வரவே...