இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதைகள்

வாழ்வியல் கவிதைகள்  1. பக்கத்து வீட்டு கிருஷ்ணனும், ராமனும் பெருமாள் கோவில் குடமுழக்கு விழாவில் வியர்வையுடன் பந்தல் போட்டு கொண்டிருந்தனர்  2. நயா பைசா இல்லாத என் வீட்டு வாசற் சுவரில், ஒய்யாரமாக நின்றுகொண்டிருந்தார் கண் திருஷ்டி கணபதி  3. சாலையில் பரிதவிப்பவர்களை பார்த்து நக்கலாக ஆட்டம் போட்டன அரசியல் கட்சிக் கொடிகள்! 4. நான் கொழுப்பெடுத்தவன் என்பதற்காக தான் என்னை லட்டு என்று கொஞ்சினாயோ நீ... (திருப்பதி சம்பவம்) 5. என்ன மாயமோ மரத்தடி ஹோட்டலில் மட்டுமே, மனதிருப்தி எனும் பண்டம் கிடைக்கிறது  6. சோகமாய், சோர்வாய், கோபமாய், வெறுப்பாய் இருந்த முகங்களுக்கு மத்தியில் கைதட்டி மகிழ்வாய் ஓர் முகம் ரயில் பெட்டிக்குள் நுழைந்தது! 7. அனைவராலும் கொட்டப்பட்டு அன்பு காட்ட ஆளின்றி ஏங்கிய சாலைக்கு...  துடைப்பம் எனும் தன் கையால் தலைக்கோதி விட்டால் தூய்மை பணியாளர் ஒருத்தி. 8. எள்ளளவும் எந்த உயிர்க்கும் தீங்கு நினைக்க கூடாது, உயிர்களை கொன்று அதன் பலனை அனுபவிக்க கூடாது... என்று சபையில் ஆக்ரோஷமாக கர்ஜித்தால் பட்டுப்புடவைக்காரி. -க.கணேஷ்   

நீங்கள் வலதுசாரியா ? இடதுசரியா? அல்லது பொதுவானவரா?

  இந்தத் தலைப்பை கேட்டவுடன் சிலருக்கு வலதுசாரி , இடதுசாரியா அப்படி என்றால் என்ன? என்ற வியப்பு ஏற்படக் கூடும் . எனவே, வலதுசாரி இடதுசாரி என்றால் என்ன என்பதை விளக்குவது அவசியமானது . இதுபோன்ற வார்த்தைகள் பொதுவாக இயக்கங்களில் துவங்கி பின்பு அரசியல் கட்சிகள் வரை பயன்படுத்தப்படும். இடதுசாரி என்றால் சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் , உரிமைகள் , சீர்திருத்தம் , முன்னேற்றம் போன்ற வார்த்தைகளை முன்னிறுத்தி அவற்றையே தங்களின் நோக்கமாக ஏற்றுக்கொண்டு செயல்படுபவை. அதேபோல், வலதுசாரி என்பது கலாச்சாரம், முப்பாட்டன், ஒழுக்கம் , படிநிலை , பாரம்பரியம் , கட்டுப்பாடு போன்ற வார்த்தைகளை முன்னிறுத்தி இயக்கங்களை நடத்தி வருபவை. இப்போது எந்த வார்த்தைகளை முன்னிறுத்தி நாம் கருத்துகளை வைக்கிறோம் என்று உணர்ந்து, சிலர் நீங்கள் இடதுசாரியா அல்லது வலதுசாரியா என்று ஓர் முடிவுக்கு வந்திருப்பீர்கள் . பலரோ எனக்கு இடதுசாரியும் தேவைப்படாது வலதுசாரியும் தேவைப்படாது நான் பொதுவான மனிதன், எனக்கும் இவற்றுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று சொல்லக்கூடும் . ...